வாக்களிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

தூத்துக்குடியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மராத்தன் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-24 11:45 GMT

விழிப்புணர்வு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது இதையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100% வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது நமது கடமை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மராத்தன் போட்டி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த மினி மரத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இந்த போட்டியை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு மராத்தனில் பள்ளி மாணவ மாணவியர் இளைஞர்கள் காவல்துறையினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News