வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

திருவேங்கடத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-01-25 04:19 GMT
 சைக்கிள் பேரணி 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை திருவேங்கடம் வட்டாட்சியர் பரமசிவம் தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி துணை தலைமை ஆசிரியர் பொண்யிருளாண்டி, கிராம நிர்வாக அலுவலர் செல்ல முருகன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News