புதுகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

Update: 2024-01-26 07:26 GMT

 வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற இந்த பேரணி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது இங்கு வாக்குப்பதிவு இலக்க வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும் தேர்தல் கல்வியறிவு குழு சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுகாக நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 80 வயது நிறைவடைந்த மூத்த வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கப்பட்டன. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மா. மஞ்சுளா வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தேர்தல் தனி வட்டாட்சியர் ஆ. சோனை கருப்பையா பங்கேற்றனர்.
Tags:    

Similar News