வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு போராட்டம்.

Update: 2024-04-16 01:51 GMT

போராட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். தேர்தலை புறக்கணித்து, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கிறோம் என கோஷமிட்டவாறு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற சங்க நிர்வாகிகளை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து, 2 பேர் மட்டும் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணனிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டு மனு அளித்தனர்.
Tags:    

Similar News