வைகை அணையில் தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2023-12-23 08:11 GMT

வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.ஐ.பெரியசாமி தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து 58 கிராமங்கள் திட்ட கால்வாயில் தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சௌ.சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, ஆகியோர் முன்னிலையில் இன்று (23.12.2023) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் .மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) பி.ஐயப்பன் (உசிலம்பட்டி) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News