மதுரை: வாராந்திர பொதுமக்கள் குறைதீர் மனு கூட்டம்
மதுரை மாநகரில் காவல்துறை சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 12:11 GMT
குறைதீர் கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (15.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் குறைதீர் மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.
காவல் துணை ஆணையர் தெற்கு மற்றும் காவல் துணை ஆணையர் போக்குவரத்து (பொறுப்பு -தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.