மின்னல் தாக்கி வெல்டர் பலி!
கீரனூர் அருகே மின்னல் தாக்கி வெல்டர் பலி.;
Update: 2024-05-18 07:32 GMT
பலி
கீரனுார்: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள தென்னத்திரையன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகன் சரவணன் (24). தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலைபார்த்து வந்தார். நேற்று மதியம் கிராமத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்துக்கொண்டிருந்த நிலையில், பசுமாட்டை கொட்டகையில் கட்டுவதற்காக அழைத்துச் சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு அதே இடத்தில் உயிரிழந்தது. மயங்கி விழுந்த சரவணனை குடும்பத்தினர் மீட்டு கீரனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரவணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.