முதல்வர் பிறந்ததினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

Update: 2024-03-09 05:11 GMT
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு எழும்பூர் தெற்கு பகுதி மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில் இன்று சென்னை, எழும்பூர், சிராஜ் மஹாலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் , தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மாநகராட்சி 6-வது மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி ஸ்ரீதர் உட்பட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News