டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-15 11:15 GMT

டிசிடபிள்யூ நிறுவனம் 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், நிறுவனத்தின் சீனியர் நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், ஆத்தூர், முக்காணி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். விழாவில், துணைத் தலைவர் சுரேஷ், அன்னை சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகி கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News