ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி
விழுப்புரத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1,000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சி.வி.சண்முகம் எம்.பி. வழங்கினார்.;
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் என்.ஜி.சக்திவேல் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர்கள் ராமதாஸ், பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஏழை, எளிய மக்கள் 1,000 பேருக்கு தையல் எந்திரம், குக்கர், கியாஸ் அடுப்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை, இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட் ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், ராஜா, பேட்டை முருகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்