திமிங்கிலத்தின் தாடை, எலும்புகள் அருங்காட்சியத்தில் வைப்பு!

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திமிங்கிலத்தின் தாடை, எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-07-01 11:39 GMT

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திமிங்கிலத்தின் தாடை, எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன.


புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கற்சிலைகள், மரசிற்பங்கள், ஓவியங்கள், பதப்படுத்தப் பட்ட விலங்குகள், பறவைகள், மன்னர் காலத்து பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மணமேல்குடி அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் புதைக்கப்பட்ட நிலையில், அதன் தாடை மற்றும் எலும்புகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவை இப்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Tags:    

Similar News