திருப்பூரில் கஞ்சா விற்ற பெண் கைது
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 05:35 GMT
கஞ்சா விற்ற பெண் கைது
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணரை பகுதியில் திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மனைவி ஷர்மிளா (வயது 27) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதையடுத்து ஷர்மிளாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.