தாழையூத்தில் பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

தாழையூத்தில் பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-06-18 09:45 GMT

கோப்பு படம் 

நெல்லை மாநகர தாழையூத்து புலித்தேவர் நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி வசந்தி (59).இவர் அங்குள்ள வயல் பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்றுள்ளார். அப்போது பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக வசந்தியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் நேற்று (ஜூன் 17) இரவு வசந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags:    

Similar News