கடன் பிரச்சனையால் ஹேர்டை குடித்து பெண் தற்கொலை

தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் ஹேர்டை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-26 08:46 GMT

தற்கொலை

தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் ஹேர்டை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது மனைவி பாத்திமா (53). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தனது மகள் திருமணத்திற்காக பல இடங்களில் கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையாம்.  இதனால் மனம் உடைந்த அவர் தலைச்சாயத்தை குடித்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News