கடன் தொல்லையால் பெண் தீ குளித்து  தற்கொலை

கன்னியாகுமரியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-28 05:49 GMT
சுபியா

குமரி மாவட்டம், திங்கள் நகரில் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி சுபியா (58). தங்கதுரை கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகனும் மகளும் உண்டு. மகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர் நேற்று அதிகாலையில் மகன் கோல்டன் சிபின் தூக்கம் விழித்தபோது, வீட்டின் அருகே இருந்து தீ வெளிச்சம் தெரிந்தது.

வெளியே சென்று பார்த்த போது உலர்ந்த தென்னை ஓலை, கதம்பை போன்றவை எரிந்து கொண்டிருந்தது. அதை அணைக்க ஓடி சென்ற போது அதன் அருகில் தனது தாயார் இறந்த நிலையில் காணப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் இரணியல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சுகி அவருக்கு சுபியாவிற்கு சுய உதவிக் குழுக்களில் அதிக கடன் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டிருந்து மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News