சேலம்: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியில் கணவன் மனைவி தகராற்றில் மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-04 08:43 GMT
தற்கொலை
சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்தவர் நாகராஜ். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.