தந்தை இறந்ததால் மகள் தற்கொலை

கரூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-28 12:10 GMT

தற்கொலை 

கரூர் மாவட்டம், ராயனூர், கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் மறைந்த பெரியசாமியின் மனைவி செல்வி வயது 45. இவரது தந்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கில் காலமானார். தனக்கு ஆதரவாக இருந்த தந்தை காலமாகிவிட்டதால், மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வி, ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் அவரது வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அறிந்த அவரது மகன் பிரவீன் குமார் வயது 25 என்பவர், தனது தாயார் செல்வியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த செல்வி, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 27ஆம் தேதி காலை உயிரிழந்தார்

எனவே, இது குறித்து பிரவீன்குமார் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக உயிரிழந்த செல்வியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News