இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உடல்நல கோளாறால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-01 11:19 GMT

தீக்குளித்து தற்கொலை 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 20 வயதான நந்தினி. இவர் 12 ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நந்தினிக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்து வந்ததாகவும் மேலும் இவருக்கு தோள்பட்டையில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல் ரீதியான பிரச்சனையில் முன்னேற்றம் ஏதும் கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக இளம் பெண் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், நேற்று மதியம் 2:30 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில் இருந்த மண்ணெண்யை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக் கண்ட அவைத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News