சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் பலி

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள புதுப் பாலத்தில் மோட்டார் பைக் மோதிந விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-10 10:01 GMT

பெண் பலி 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதுக்குடி காந்தி நகரை சேர்ந்தவர் 37 வயதான பர்வீன்பானு. அதே போல் லால்குடி அருகே வாளாடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான சஞ்சய்.இவர்கள் இருவரும் கடந்த 7 ந்தேதி மாலை திருச்சி கல்லணை சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கல்லணை சாலையில் உள்ள புதுப் பாலத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுமாறி விழுந்த பர்வீன்பானுனுக்கு தலையில் படுகாயம் ஏற்ப்பட்டது. சஞ்சய்க்கும் காலில் படுகாயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பர்வீன் பானு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News