மகளுடன் இளம்பெண் மாயம் – காவல்நிலையத்தில் புகார்

புதுக்கோட்டை மாவட்டம்,முல்லையூரில் மகளுடன் வெளியில் சென்ற இளம்பெண்ணை காணவில்லை என கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-03-06 08:52 GMT

இளம்பெண் மாயம்

இலுப்பூர் அடுத்த முல்லையூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி வெண்ணிலா. இவர் தனது நான்கு வயது உள்ள தன்சிகா என்ற பெண் குழந்தையுடன் வீட்டிலிருந்து மாயமானார். இந்நிலையில் அக்கம் பக்கம் என பல்வேறு இடங்களிலும் தேடியும் தாயும் மகளையும் காணவில்லை.

இதனைத்தொடர்ந்து கதிர்வேல் இலுப்பூர் போலீசில் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தாயும் குழந்தையையும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News