ஆர்.கே.பேட்டையில் இளம்பெண் மாயம்

திருவள்ளூவர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இளம்பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-24 03:40 GMT

இளம்பெண் மாயம்

ஆர்.கே.பேட்டை அடுத்த பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் சந்தியா, 22. இவர், கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். 18ம் தேதி அதிகாலை 4:00 மணியளவில் சந்தியாவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சந்தியா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசில், வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News