கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்

சீவலப்பேரி அருகே உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்.

Update: 2024-04-24 06:01 GMT

முளைப்பாரி ஊர்வலம்

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இன்று (ஏப்.24) கோவில் கொடை விழா நடைபெறுகின்றது. இந்த கொடை விழாவை முன்னிட்டு சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News