மகளிர் தின சிறப்பு செஸ் போட்டி

மகளிர் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் தூய இருதய குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

Update: 2024-03-04 07:19 GMT

மகளிர் தினத்தை முன்னிட்டு ராசிபுரம் தூய இருதய குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சித்திரம் ஃபவுண்டேஷன் மற்றும் எய்ம் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ராசிபுரம் தூய இருதய குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் அதிகமாக மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்திகேயன், மற்றும் சிறப்பு விருந்தினராக Mrs.தமிழ்நாடு பட்டம் வென்ற sri I glow makeover உரிமையாளர் திருமதி.கௌசல்யா, வருண் மருத்துவமனை மருத்துவர் திருமதி. உதயா ஶ்ரீதர், மற்றும் ராசிபுரம் 5 வார்டு கவுன்சிலர் திருமதி. வித்யாதேவி ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

Tags:    

Similar News