கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக  நடந்து வருகிறது.

Update: 2023-12-08 15:11 GMT

கொசு அடிக்கும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பல நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோம்பு பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அனைத்து வார்டுகளில் கொசுத்தொல்லைகள் அதிகரித்து வருவதால், அனைத்து கவுன்சிலர்களும் நகரமன்ற கூட்டத்தில் பேசும் போது, அனைத்து வார்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நகராட்சி தலைவர் விஜய்கண்ணா உத்திரவுப்படி, அனைத்து வார்டுகள், மார்க்கெட், பூங்கா, வாரச்சந்தை வளாகம் ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் சென்று, நோய் வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வருகின்றனர்.

Tags:    

Similar News