சேலத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை !
சேலத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை - போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 04:33 GMT
தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியில் தங்கியிருந்து அங்கு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.