கல்லூரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
மார்த்தாண்டம் அருகே கல்லூரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-24 16:12 GMT
கல்லூரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு வெள்ளியோடு, திறப்பு விளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். மார்த்தாண்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார், இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.