அரசியல் கட்சி சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சியினர் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-03-17 08:22 GMT

சுவரொட்டிகளை அகற்றும் பணி

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் ,சுவரொட்டிகள் அதிகளவு இருந்த நிலையில், அதை அகற்றும் பணியில் பள்ளிபாளையம் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News