தாவரவியல் துறை சார்பாக பயிலரங்கம்

Update: 2024-03-09 09:35 GMT

தாவரவியல் துறை சார்பாக பயிலரங்கம்

சிவகங்கை மாவட்டம் இளையங்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பாக பயிலரங்கம் புதிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் மூலக்கூறு மற்றும் மூலிகை மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பங்களை பற்றிய பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில் முனைவர் A. ஜஹாங்கிர் துணை முதல்வர் தலைமை ஏற்றார். துறைத்தலைவர் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா வரவேற்றார், உதவிப்பேராசிரியை முனைவர் E. ரோஷன் ஆரா பேகம் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் ஷேக் ஜஹபர் அலி மூலிகை மருந்துகள் தயாரிப்பு குறித்து செயல்முறை செய்தார் மற்றும் புதிய மூலிகை மருந்துகள் மற்றும் மூலிகை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் குறித்து உரை நிகழ்த்தினார்.இரண்டாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவி கவிதா நன்றி உரை கூறினார். முதலாம் ஆண்டு மாணவர் நூர் முஹம்மது பாரூக் நிகழ்ச்சியை தொகுப்பு வழங்கினார்.

Tags:    

Similar News