உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - வட்டாட்சியர் சங்கக்கொடி ஏற்றினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காயம்பட்டு கிராமத்தில் வட்டாட்சியர் முருகன் சங்க கொடி ஏற்றி வைத்தார்.

Update: 2023-12-03 15:43 GMT

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காயம்பட்டு கிராமத்தில் வட்டாட்சியர் முருகன் சங்க கொடி ஏற்றி வைத்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டக்குழு, ஒன்றிய மற்றும் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில் கமிட்டி உறுப்பினர் மற்றும் கிளை செயலாளர் அரிகிருஷ்ணன் முன்னிலையில் சங்க கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கொடியை ஏற்றி வைத்து பங்கேற்ற நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க ஒன்றிய செயலாளர் சங்கர், பொருளாளர் அண்ணாமலை, கிளை மகளிர் அணி குப்பு, துணை தலைவர் ஆறுமுகம், கிளை துணை செயலாளர் தேன்மொழி, கமிட்டி உறுப்பினர், கிளை பொருளாளர் பழனி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News