உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக வெண்புள்ளி தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-25 16:01 GMT

வெண்புள்ளி தினம்

உலக வெண்புள்ளி தின நாள் ஜூன் 25ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோய் அல்ல அது எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

 இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் வெண்புள்ளி தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் துவங்கிய பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் விஜயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News