தி.மலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு

Update: 2023-12-11 03:13 GMT

காவலர் தேர்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணை யம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு  திருவண்ணாமலையில் நடைபெற்றது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 3359 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான எழுத்துத் தேர்வு நேற்று  தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இரண்டாம் நிலைகாவலர்,ஜெயில் வார்டன், தீயணைப்பு மீட்பு பணி காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது. சண்முகா கலை அறிவியல் கல்லூரி,கம்பன் மகளிர் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, எஸ்கேபி பொறியியல் கல்லூரி, கரண் கலை அறிவியல் கல்லூரி, சன் கலை அறிவியல் கல்லூரி, பகவான் பள்ளி, எஸ் ஆர்ஜிடிஎஸ் பள்ளி ஆகிய எட்டு மையங்களில் நடை பெறும் தேர்வில் 9167 பேர் தேர்வு எழுதினர் . திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன்தலை மையில் 900-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News