"முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்"

கோவிந்தவாடி ஊராட்சியில் முந்திரி மரங்களில் மகசூல் துவக்கம்.

Update: 2024-04-26 05:10 GMT

முந்திரி மகசூல் 

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், 2019ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகளும் இணைந்து, 100க்கும் மேற்பட்ட முந்திரி மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வந்தனர். சமீபத்தில், அனைத்து முந்திரி மரங்களும், காய்கள் காய்க்க துவங்கி உள்ளன. முழுமையாக மகசூல் வந்த பின், பொது ஏலம் விட்டு வருவாய் ஈட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது."
Tags:    

Similar News