மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவீர்: நாகை எம்.எல்.ஏ

நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவீர் நாகை எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-11 08:41 GMT

எம்எல்ஏ

நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவீர் நாகை எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவேண்டுமென ஏற்கெனவே சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினேன்.

அப்போது பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இந்த விசயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கும் என்று தெரிவித்தார்.

அதன்படி அரசு விரைந்து செயல்பட்டு மக்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று அமைச்சரிடம் மீண்டும் வலியுறுத்தியுள் ளேன். மேலும் இதுகுறித்து அமைச்சர்டி.ஆர்.பி.ராஜாவிடம் பேசியுள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற் கும் கொண்டு சென்றுள்ளேன்.

எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மக்களுடன் பேச் சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News