இளம்பெண் மாயம் - தந்தை போலீசில் புகார்
உடையாளிப்பட்டியில் மகளை காணவில்லை என தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-05 03:06 GMT
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார், தற்போது விராலிமலை அருகே உடையாளிப்பட்டியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கும், இவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகிற 15- ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டிலிருந்து ஜனனியை நேற்று முதல் காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை. இந்நிலையில் அவரது தந்தை சசிகுமார் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.