திருமணத்திற்கு பெண் பார்க்க  மறுத்ததால் இளைஞர் தற்கொலை

குத்தாலம் கொழையூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (36 ) என்பவர் இவரது திருமணத்திற்குப் பெண் பார்க்காததால்  கோபித்துக் கொண்டு  விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-05-22 13:02 GMT

கோப்பு படம்

. மயிலாடுதுறை அருகே குத்தாலம் கொழையூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சதீஷ் (36 )விவசாய கூலி தொழில் செய்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது இவருடன் பிறந்தவருக்கும் திருமணம் ஆகியும் சகோதரிக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தன் தந்தையிடம் தன் திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.  ஒரு சில சமயங்களில் தகராறும் நடைபெற்று வந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி அன்று வீட்டில் பெண் பார்க்கச் சொல்லி வற்புறுத்திய போது தகராறு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

கொழையூர் பெருமாள் கோவில் பகுதியில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு, நான் பூச்சி மருந்து குடித்துள்ளேன் என்று தன் தந்தைக்கு செல்போன் மூலம் செய்தி சொல்லிவிட்டு மயங்கி விழுந்து விட்டார்.  உடனடியாக அப்பகுதிக்கு  சென்றவர்கள் சதீசை மீட்டு குத்தாலம் மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கு  முதலுதவி அளித்த பிறகு அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

 உயிருக்கு ஆபத்தால் நிலை ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொண்டுபோய் சேர்த்தனர்,   ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சதீஷின் தந்தை தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News