பரமத்தி வேலூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை !

பரமத்தி வேலூர் அருகே இளம் தூக்கிட்டு தற்கொலை. பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-03 10:40 GMT

தற்கொலை

பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையம், காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து.லாரி டிரைவர். இவரது மகள் நந்தினி (22). இவர் பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு தண்ணீர் எடுத்து செல்வதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டில் இருந்த தங்களது மகள் இல்லாததை பார்த்து பெட்ரூமிற்கு சென்று கதவை திறக்க முயன்ற போது கதவு உள்பக்கம் சாத்தப்பட்டிருப்பதை பார்த்து தனது மகளை கதவை தட்டி அழைத்துள்ளனர். கதவை திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து வீட்டின் மேற்கூறையை பிரித்து உள்ளே இறங்கி பார்த்துள்ளனர்.

அப்போது நந்தினி வீட்டின்  மேற்கூறையில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடணடியாக மகளை‌ காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.‌அங்கு  அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தினி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி இறப்பிற்கான காரணம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News