பெண் வழக்கறிஞரை தாக்கிய இளைஞர் கைது

மாரண்டஹள்ளி அருகே சொத்து தகராறில் பெண் வழக்கறிஞரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-19 05:39 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே உள்ள செவத் தம்பட்டியை சேர்ந்தவர் வள்ளிநாயகி. வழக்கறிஞராக உள்ளார் இவர் நேற்று தனது அக்காள் அமுதவள்ளி, அண்ணி ஜெயந்தி ஆகியோருடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேதக்கார தெருவை சேர்ந்த கவுதம் என்பவர் குடிபோதையில் கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்தார்.

இதையடுத்து கவுதம் அங்கு நின்ற வழக்கறிஞர் வள்ளிநாயகியி டம் தகராறு செய்ததுடன், திடீரென பாட்டிலில் இருந்த பெட்ரோலை வள்ளிநாயகியின் தலையில் ஊற்றினார். மேலும் அருகே கிடந்த தென்னை மட்டையால் வழக்கறிஞரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பெண் வழக்கறிஞர் வள்ளி நாயகி மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கவுதமை கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News