முதியவரை தாக்கிய வாலிபர் கைது
போடி வினோபாஜி காலனியில் நடந்து சென்ற முதியவரை தாக்கிய வாலிபர் கைது.
Update: 2024-01-29 06:15 GMT
தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் ஒண்டிவீரன் இவர் அதே பகுதியில் மரக்கடையில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மரக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த அருண்குமார் என்பவர் ஒண்டிவீரனை இடித்துள்ளார் இதனை தட்டி கேட்டு ஒண்டிவீரனை அருண்குமார் கத்தியால் கிழித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்தனர்