அரசு பஸ் நடத்துனருக்கு அறை விட்ட வாலிபர் கைது !

குமாரபாளையம் அரசு பஸ் நடத்துனருக்கு அறை விட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-05 07:06 GMT

 வாலிபர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் நேற்றுமுன்தினம் பகல் 11:40 மணியளவில், அங்கு நின்றிருந்த அரசு பஸ்ஸில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். இதில் பெண்கள் பகுதியில் ஏறிய வாலிபர் ஒருவரை பார்த்து, என்ன அவசரம்? எதற்கு இந்த வழியில் இவ்வளவு அவசரமாக ஏறுகிறாய்? என்று நடத்துனர் கோபால், 59, கேட்க, அந்த வாலிபர், இது என்ன உன் அப்பன் வீட்டு பஸ்ஸா? என தகாத வார்த்தையில் பேசியதுடன், இடது காதின் மீது வேகமாக அறைய, நடத்துனர் காதில் ரத்தம் வழிந்தது. இவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்த பின், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான, பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன், 23, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

Similar News