கரூர் அருகே பொருள்களை களவாடிய இளைஞர்கள் கைது

கரூர் அருகே ரூ 57 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை களவாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-16 16:15 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, பஞ்சமாதேவி அருகே உள்ள சந்தன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் வயது 47. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் மார்ச் 14ஆம் தேதி மாலை 3 மணி அளவில், வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, இவரது வீட்டிற்குள் புகுந்த, கரூர், ராயனூர், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் வசந்த் ஆகிய இளைஞர்களும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 10 வயர் காயல்களும், ரூ. 7000 மதிப்புள்ள இரண்டு வெள்ளி பொருட்களையும் களவாடி உள்ளனர்.

இது தொடர்பாக மாணிக்கவாசகம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட, ரஞ்சித் மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News