இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் கைது

சிவகங்கையில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-06 09:54 GMT

சிவகங்கையில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனை பகுதியில் கட்டிட இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் அரியலூர் மாவட்டம் செம்மண் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாயவேல் வயது (50). இவர் அவரது இரு சக்கர வாகனத்தில் நேரு பஜாரில் உள்ள தனியார் துணிக்கடையில் துணி எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவரை நோட்டமிட்ட ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மகன் காளீஸ்வரன் (வயது 20) என்ற இளைஞர் மாயவேலின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

மாயவேல் துணிக்கடை சென்று மீண்டும் திரும்பி வந்து அவரது இருசக்கர வாகனத்தை பார்த்துள்ளார். அந்த இருசக்கர வாகனம் மாயமாகியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த மாயவேல் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து துணிக்கடையில் உள்ள சிசிடிவியின் அடிப்படையில் காளீஸ்வரனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News