விழுப்புரம் லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை !

அடையாளம் தெரியாத வாலிபர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-04-10 09:25 GMT

 வாலிபர் தற்கொலை

விழுப்புரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத வாலிபர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் புதுவை தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே மேம்பாலத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் விழுப்புரம் நோக்கி லாரி வந்துகொண்டிருந்தது.

அப்போது மேம்பாலத்தின் பக்கவாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென லாரியின் முன்பு பாய்ந்ததில் லாரி அவர் மீது ஏறி இறங்கியது.

இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் நகர போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News