வயிற்று வலியால் வாலிபர் விஷம்குடித்து தற்கொலை

அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தில் வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-22 05:01 GMT

வயிற்றுவலியால் வாலிபர் தற்கொலை

அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். ஐடிஐ படித்துள்ள இவர் கடந்த ஒரு மாத காலமாக கோவையில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ஊருக்கு வந்தவர் வயிற்றுவலியால் அவதிபட்டுள்ளார். இந்நிலையில், இதற்காக சிகிச்சை அளித்தும் சரியாகததால் சம்பவதன்று ஏலாக்குறிச்சி மதுபான கடை அருகே விஷம்குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அரவிந்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News