தூத்துக்குடி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபார்த்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-31 02:34 GMT
தற்கொலை
தூத்துக்குடி, தொ்மல் நகரைச் சோ்ந்த குணபாலன் மகன் விக்னேஷ் (24). அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளியான இவருக்கு, மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சம்பவத்தன்று இரவு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் துறைமுகச் சாலையில் உள்ள தனியாா் கிடங்கு அருகேயுள்ள கம்பத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தொ்மல்நகா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.