தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

பெரியபாளையம் அருகே இளநீர் பறித்த இளைஞர் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-10 16:41 GMT

பலியான இளைஞர் 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சின்னராசு ( வயது 25).

என்ற இளைஞர் கடந்த 5மாதங்களாக திருக்கண்டலம் பகுதியில் இயங்கி வரும் செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அருகில் உள்ள தென்னைமரத்தில் ஏறி சின்னராசு இளநீர் பறித்தார்.அப்போது சின்னராசு கால் வழுக்கி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சின்னராசுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னராசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News