சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

குலசேகரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-22 13:14 GMT

விபத்தில் இளைஞர் பலி 

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையை அடுத்த வலியஏலா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News