முதுகு வலியால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலத்தில் கோலமாவு விற்பனை செய்த இளைஞர் முதுகு வலியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2024-04-22 07:11 GMT

வழக்கு பதிவு 

திருச்சி மாவட்டம் முசிறி அக்ரோ சர்வீஸ் எதிர்ப்பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.இவரது மகன் 21 வயதான சந்துரு.இவர் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலத்தில் உள்ள தனது மாமா முருகேசன் வீட்டில் கடந்த மூன்று மாதமாக தங்கியிருந்து கோலமாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சக்திவேல் புலிவலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News