முசிறி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரியாற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-26 03:06 GMT

ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் மாயம்

மணப்பாறை அருகேயுள்ள போ்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (45). விறகு வெட்டும் தொழிலாளியான இவா், இவரது தம்பி மகன் சக்திவேலு (22), அதே பகுதியைச் சோ்ந்த ஜக்கம்மா ஆகியோா் நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் விறகு வெட்டும் வேலைக்குச் சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பினா். அப்போது முசிறி பெரியாா் பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மூவரும் காவிரியாற்றில் குளித்தனா்.

அப்போது ஜக்கம்மா நீரில் மூழ்குவதைக் கண்ட சக்திவேல் அவரை காப்பாற்ற முயன்றாா். ஆனால் ஜக்கம்மா நீச்சல் அடித்து கரை சோ்ந்த நிலையில், சக்திவேல் ஆழமான பகுதியில் மூழ்கினாா். தகலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சக்திவேலை சடலமாக மீட்டனா். புகாரின்பேரில் முசிறி போலீஸாா் இறந்தவரின் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags:    

Similar News