ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-04 05:16 GMT

ஆற்றில் மூழ்கி பலி 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இவருக்கு வயது 22 ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து 8 நபர்களளுடன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆலம்பாடி என்ற பகுதியில் இவர்கள் குளித்த போது கிருஷ்ணமூர்த்தி ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நண்பர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கிருஷ்ணமூர்த்தியை காப்பாற்ற முடியாமல் கிருஷ்ணமூர்த்தி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஒகேனக்கல் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News