கடன் சுமையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை !!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-05-29 12:22 GMT
தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவெள்ளநல்லூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் 32 வயதான நாதன் செல்லையா. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.